Thursday, December 3, 2009

ஞானம்!!



வாழ்க்கையின் வலிகள்
சுற்ற தொடங்கியது
ஒரு வட்டமாய்.......
ஒற்றை புள்ளி மையத்தை
உற்று நோக்கினேன்
மெல்ல ஒரு புள்ளியாய்
பின் சிறு வளையமாய்
கொஞ்சம் பெரிதாய்
இன்னும் கொஞ்சம் பெரிதாய்
வேகமாய் அதிவேகமாய்
சுழன்று சுழன்று
சுருங்கி..........
வட்டம்
ஒரு பெரும் புள்ளியாய்
என் கண்முன்னே நின்று போனது!