Saturday, August 8, 2009

என்னவளின் நினைவாய்


கதவு திறந்ததும் காணாத புன்னகை
காலனி கழற்றியதும் கால்படும் தூசி
கலைந்துகிடக்கும் கட்டில் துணிகள்
கழுவாது காய்ந்த காலை தட்டு
கதவோரும் ஒட்டியிரும் துண்டு சீட்டு
காலை எழுந்தவுடன் காணாத காபி
கட்சிதமாய் வராத தொலைபேசி
கண்ணாடியில் ஊசலாடும் உன் ஒற்றை தலைமுடி
கண்கள் மூடும்போது படாத கை
.
இப்படி எல்லாமே உன்னை நினைவுபடுத்த!!
என்று வருவாய் என்ற எண்ணத்தில் நான்.
வா விரைவில்,
.
ஒரு நிமிடம் யோசிக்கையில்
வேண்டாம்.......வரும் தேதி மாற்றாதே
உன்னை நினைக்க இனி என்னவெல்லாம்
உள்ளதென்று ஒரு பட்டியல் இடுகிறேன்
வந்து வாசித்துகொள் உன் வசிகர பார்வையோடு!!!
.
.
.
(......ஊருக்கு போய் இருக்கும் என்னவளின் நினைவாய்)