Tuesday, January 6, 2009

இன்பம் எங்கே??


மகிழ்வென்பது எதில்?
மனதில் வரும் துள்ளலா?
மதி மயங்கும் மயக்கமா?
எதில் இன்பம்?
பணத்திலா? பட்டு துணியிலா?
மின்னும் பொன்னிலா?
மிதக்க வைக்கும் மதுவிலா?

இல்லை, இவை எதிலுமில்லை.
பின் எங்கே?
அன்பில் மட்டும்! அன்பில் மட்டும்

அன்பான அரவணைப்பில்!
ஆசையான பார்வையில்!
இதமான இதழ் பதிவில்!
ஈர்க்கும் அந்த புன்சிரிப்பில்!
உள்ளம் கவரும் களவில்!
ஊமை மொழியின் அர்த்தங்களில்!
என்னவனே(ளே) எனும் அழைப்பில்!!
ஏங்க வைக்கும் பிரிவில்!
அய்யம் இல்லா மனதில்!
ஒரு பிரிவின் மெலிதலில்!!
ஓராயிர கனவில்!!

@ மாதவன் 2009