Thursday, December 3, 2009

ஞானம்!!



வாழ்க்கையின் வலிகள்
சுற்ற தொடங்கியது
ஒரு வட்டமாய்.......
ஒற்றை புள்ளி மையத்தை
உற்று நோக்கினேன்
மெல்ல ஒரு புள்ளியாய்
பின் சிறு வளையமாய்
கொஞ்சம் பெரிதாய்
இன்னும் கொஞ்சம் பெரிதாய்
வேகமாய் அதிவேகமாய்
சுழன்று சுழன்று
சுருங்கி..........
வட்டம்
ஒரு பெரும் புள்ளியாய்
என் கண்முன்னே நின்று போனது!

Saturday, August 8, 2009

என்னவளின் நினைவாய்


கதவு திறந்ததும் காணாத புன்னகை
காலனி கழற்றியதும் கால்படும் தூசி
கலைந்துகிடக்கும் கட்டில் துணிகள்
கழுவாது காய்ந்த காலை தட்டு
கதவோரும் ஒட்டியிரும் துண்டு சீட்டு
காலை எழுந்தவுடன் காணாத காபி
கட்சிதமாய் வராத தொலைபேசி
கண்ணாடியில் ஊசலாடும் உன் ஒற்றை தலைமுடி
கண்கள் மூடும்போது படாத கை
.
இப்படி எல்லாமே உன்னை நினைவுபடுத்த!!
என்று வருவாய் என்ற எண்ணத்தில் நான்.
வா விரைவில்,
.
ஒரு நிமிடம் யோசிக்கையில்
வேண்டாம்.......வரும் தேதி மாற்றாதே
உன்னை நினைக்க இனி என்னவெல்லாம்
உள்ளதென்று ஒரு பட்டியல் இடுகிறேன்
வந்து வாசித்துகொள் உன் வசிகர பார்வையோடு!!!
.
.
.
(......ஊருக்கு போய் இருக்கும் என்னவளின் நினைவாய்)

Sunday, March 22, 2009

ஐந்தாம் குறிஞ்சியில்




ஐந்தாம் குறிஞ்சியில் அமைதியான அரை நிலா நாளில் அம்மாஞ்சி கிழவன் கொஞ்ச்ம் பின்னோக்கி போனான். அதே நிலா, முன்னொரு நாளில் இவனை கவி எழுத தூண்டியத்தை கன்னத்தில் புன்னகையோட புடம் போட்டு பார்த்தான்.............

இரண்டு நாட்களுக்கு முன்னே ரயில் வண்டில் இடித்துக்கொண்டு இங்கிதமாய் அடித்துக்கொண்டும், கொண்டு வந்திருந்த கொய்யா பழங்களை பகிர்ந்துன்னி பரிகாசம் செய்தது கொண்ட பருவம் முதிர்ந்த அந்த தம்பதிகள்.......பாதி வாழ்நாள் முன்னே இவனும் இவனுக்கு வாழ்கை பட்டவளும் இடித்து விளையாடியதை இன்று நினைவில் கொண்டு வந்தன. ஏனோ, அதனினும் பாதி நாளில் வேறு யாருடனோ இருந்த அந்த இனிய நினைவுகளும் அவனை இயக்காமல் இல்லை. இரண்டும் சுகமான நினைவுகள் தான். ஆனால் அளவிலே வித்தியாச பட்டு இருந்தன

பத்து நாட்களுக்கு முன் பக்கத்துக்கு வீட்டு கதை கேட்டது நினைவில் வந்தது...அவர் பேரன், யாரோ ஒரு பெண்ணுக்காக பெற்றவரை புறந்தள்ளி புது வாழ்கை தொடங்கியதை புலம்பி சொன்னபோது, ஆறுதலாய் நாலு வார்த்தை சொல்லி அனுப்பிவைத்த பின்னே, போனவன் பெற்றோரை புறந்தள்ளினனோ, இல்லை பிடித்தவளை கரம் பிடித்தானோ என எண்ணி....பின்னது சரிஎன்று பேதை மனம் சொல்லியது.....அன்று அவனால் முடியாததை இன்று எவனோ செய்ததை இனிதே என்று ஏற்று கொண்டு மனசுக்குள்ளே வாழ்த்து சொன்னான்

முப்பது வருடங்களில் பாதிக்கும் மேலான அவள் பிறந்த நாட்கள் நினைவிலிருந்ததும் மீதி மறந்து போனதும் எண்ணி பார்த்தான். முதன்முதலாய் அவள் பிறந்த நாள் மறந்த சில நாட்களுக்கு பின் அவன் அதை நினைவில் கொண்ட நிகழ்ச்சியை நினைத்து பார்த்தான். கொண்டவளோடு கொண்ட சண்டையிலே வாழ்க்கையாய் எண்ணிய போது அவள் நினவு வராமல் இல்லை. வாழ்வு வேறு மாதிரி இருந்திருக்குமோ அவளோட என்ற எண்ணமும் வந்தது. மறந்ததன் காரணம் புரிந்தது...வாழ்க்கை சக்கரம் வேகமாக ஓடும் போது நிகழ்வுகளும், நிஜங்களும் கொஞ்ச்ம் நினவுகளை மறக்க செய்வதை உணர்ந்தான். அது தான் உண்மையும் கூட

பல வருடங்களுக்கு முன் அவள் இல்லம் சென்றபோது கல்லூரி க்கு செல்லும் மகளை அழைத்து வந்து அறிமுகம் செய்தபோது, கல்லூரி நாட்களில் இவள் இருந்ததை போல அவள் இருப்பதை எண்ணிக்கொண்டிருந்ததை அவளும் புரிந்து கொண்டு ஒரு புன்னகை செய்ததை அறிந்து கொண்டான். வாசல் வரை வந்து அவள் வழி அனுப்பிய போது எஞ்சியிருந்த காதல் வேறு பரிமாணமானாதை இருவரும் உணர்ந்தார்கள்.

இனியும் கொஞ்சம் பின்னோக்கி யோசித்தான்......அவளுக்கு திருமணம் என்ற செய்தி கேட்டபோது, தான் இயலமயாயும், பிரியமால் பிரியபோகும் உறவையும் எண்ணி வருத்த பட்ட நாட்களும் நிமிடங்களாயும்......நினவில் இருந்த அகலவே அகலாது என்று நினத்ிருந்த உறவையும், இப்போது நினைத்து பார்த்தால் அவன் மேல் அவனுக்கு சிரிப்பு வந்தது.......கால சுழற்சில் நினைவுகளாய் தான் இருக்கும் என்ற உண்மை நிஜங்களோடோ தினம் உழலும் போது

இவன் வருகை கண்டால் அவள் எழுந்ததும், இரட்டை பின்னல் எப்படி இருக்கும் என்பதர்க்கு மறுநாள் பின்னலோடு வந்து பதில் அளித்தித்தும், அவன் குடித்து மிச்சம் வைத்த தேநீர் குப்பியிலே தேங்கி இருந்த சிறு துளிகளை எச்மென்று எண்ணாமல், இதுவாது மிச்சம் வைத்தானே என்று யாருக்கும் தெரியாமல் எடுத்து குடித்தத்தை இவன் ஓரா கண்ணால் கண்டு மகிழ்ந்ததையும் இன்று நடந்தது போல எண்ணி மகிழ்ந்தான்.....

சுகமான நினைவுகளில் இவன் பறந்து கொண்டிருந்த போது..........தாத்தா என்று அழைத்து கொண்டு பேததி அவன் மடியில் அமர்ந்தாள் ஒரு நிலா கதை சொல்ல சொல்லி.........

Tuesday, March 3, 2009

தொடர் பதிவா? இல்லை ஒரு கல்லுல ரெண்டு மாங்காவா?

நேத்து காலைல பிரென்ட் கிட்ட இருந்து ஒரு போன். என் பொண்ணுக்கு இன்னைக்கு பர்த்டே உன்னை இன்வைட் பண்றேன்ன்னு. உடனே வய்ப்கிட்டே கால் பண்ணி ஒரு கிப்ட் வாங்க சொல்லி, ஈவிங் கார் ஸ்டார்ட் பண்ணி ரோடுல டிரைவ் பண்ணா ஒரே டிராபிக். மூணு சிக்னல் கிராஸ் பண்ணி, அப்புறம் பார்கிங் லோட் தேடி அலைஞ்சு கார் பார்க் பண்ணி லிப்ட்-ல பட்டன் தேடி கண்டுபிடிச்சி 5th ப்ளோர் சேரும்போது 15 மினிட் லேட். அங்கே ஒரு குட்டி பொண்ணு மம்மி எனக்கு பலூன் வேணும்ன்னு கேட்க, மம்மி நீ டாடி கிட்டே கேளுன்னு சொன்னாங்க. சீலிங் ல இருந்த பலூன சேர் போட்டு எடுத்து கொடுத்தார் பிரென்ட். அப்புறம் கேக் கட் பண்ணங்க. எல்லோரும் ஹாப்பி பர்த்டே டு யு ன்னு பாடினோம்.

ஒரு ப்ளேட் ல கேக் கொடுத்தாங்க, லேடீஸ் நகைய பத்தியும் குழந்தைங்க ச்டுடிஎஸ் எக்ஸாம் பத்தி பேச, ஜென்ட்ஸ் பொலிடிக்ஸ் பத்தியும் மார்க்கெட் பத்தியும் பேசினோம். கொழந்தைங்க டான்ஸ் பண்ணங்க, கேம்ஸ் விளையாண்டாங்க, ரைம்ஸ் சொன்னாங்க அப்புறம் எல்லாரும் பை சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பினோம். ஒருத்தருக்கு கார் இல்லை அதனால அவரை வீட்டு வரை
போயி ட்ரோப் பண்ணிட்டு வீடு வந்து சேரும்போது மணி நைட் 10.

என்னடா இது வழக்கொழிந்த தமிழ் சொற்கள் கேட்ட, இங்கே வேற கதையா இருக்குன்னு நீங்க நினைச்சா அதுக்கு நான் என்ன பண்றாது. எதுவெல்லாம் தமிழ் சொல் இல்லைன்னு நீங்க பீல் பண்றீங்களோ அது எல்லாம் தான் நாமோட செந்தமிழ சாப்ட்டுட்டு இருக்கு.

பின்குறிப்பு:: தங்கச்சி ராஜி அங்கே முணுமுணுக்கறது கேட்குது, முதல உங்க பெயரை தமிழ் ஆக்கிட்டு அப்புறம் அட்வைஸ் பண்ணுங்கன்னு!!!

ராஜி மாட்டி விடமாட்டேன் ன்னு சொன்ன பிரியா அவங்கள இங்கே
மாட்டி விட்டுருக்கேன் , தொடரை தொடர!!

தொடர் பதிவா? இல்லை ஒரு கல்லுல ரெண்டு மாங்காவா? ரெண்டும்
தான். பதிவு தொடர்ந்தா மாதிரியும் ஆச்சு, நேத்து என்ன நடந்தது ன்னும் சொல்லிட்டேன் இல்லெ!!

Tuesday, January 6, 2009

இன்பம் எங்கே??


மகிழ்வென்பது எதில்?
மனதில் வரும் துள்ளலா?
மதி மயங்கும் மயக்கமா?
எதில் இன்பம்?
பணத்திலா? பட்டு துணியிலா?
மின்னும் பொன்னிலா?
மிதக்க வைக்கும் மதுவிலா?

இல்லை, இவை எதிலுமில்லை.
பின் எங்கே?
அன்பில் மட்டும்! அன்பில் மட்டும்

அன்பான அரவணைப்பில்!
ஆசையான பார்வையில்!
இதமான இதழ் பதிவில்!
ஈர்க்கும் அந்த புன்சிரிப்பில்!
உள்ளம் கவரும் களவில்!
ஊமை மொழியின் அர்த்தங்களில்!
என்னவனே(ளே) எனும் அழைப்பில்!!
ஏங்க வைக்கும் பிரிவில்!
அய்யம் இல்லா மனதில்!
ஒரு பிரிவின் மெலிதலில்!!
ஓராயிர கனவில்!!

@ மாதவன் 2009